|
|
அம்மாவும் அவரது இன்றய வாழ்வும் |
www.mykathiravan.com "தாயிற் சிறந்தோர் கோவிலும்லை" என்பது ஆன்றோர் வாக்கு. ஆம் இன்று நாம் எத்தனைபேர் பெற்றவளை தெய்வமாக நினைக்கின்றோம். குறைந்த பட்சம் மனிதப் பிறவியாகவாவது மதிக்கின்றோமா? இதற்கன பதில் இல்லை என்பதுதான், ஏனெனில் பதில் நாம் உடனேயே வைத்துள்ளோம். இன்று ஒரு குடும்பம் எனில் கணவன், மனைவி நாம் இருவரும் வேலை செய்கின்றோம் நேரம் போதவில்லை இது ஒரு அவசர உலகம் நாமும் ஓட வேண்டியுள்ளது என்பதுதான். இந்த அவசர உலகத்துக்கும் பெற்றவளிடம் அன்பு காட்டுவதற்கும் என்ன தொடர்பு! இது ஒரு பொறுப்பிலிருந்து நழுவுவதற்கான காரணம் என்று புரியவில்லையா? நிறைய வீடுகளில் பெற்றவள் என்பது வேலைக்காரியாகிவிட்டது. அதாவது சம்பளம் பெறாத வேலைக்காரி. பெற்றவள் வேலை செய்வதை தவறு என்று சொல்லவில்லை. ஆனாலும் அதற்கான வரவேற்புக் கிடைக்க வேண்டும் அல்லவா. கிழமையில் ஒரு நாள் அதுவும் விடுமுறை நாட்களில் அவருக்கு உதவி செய்தல, அவரிடம் பொறுமையாக நடந்து கொள்ளல், எப்போதும் உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம் என்பதை உணர்த்திக்கொண்டு இருத்தல் கனிவாக நடந்து கொள்ளல் என்பது எமக்கு வேண்டும். இதனை செய்து பாருங்கள் ஒவ்வொரு வீடுகளிலும் நிறைய மாற்றங்கள் குடும்பசச்சூழலில் என்னைப் பொறுத்த வரையில் "அன்பான குடும்பம்" என்பதுதான் தமிழில் முதல் அழகான சொல் அதிலும் இனிமையும் அழகும் சேர்நத சொல் "அம்மா" என்பதாகும். நாம் பிறக்கும் போது அழுகின்றோம் ஆனால் அப்போது எமக்கு எந்த மொழியும் சைகையும் புரிவதில்லை. ஆனால் நாட் செல்லச் செல்ல பெற்றவளைத் தெரிந்து கொள்கின்றோம். எப்படித் தெரியுமா? அவளின் வாசனையை வைத்து உணர்கின்றோம். ஆனால் பின் நாளில் அவள் வாயால் சொன்னால் கூட நிறைய விசயங்களை புரிந்து கொள்ள மறுக்கின்றோம். அதுதான் எமது சுயநலம். "ஆம்" கண்னும் கருத்துமாக வளர்த்து கல்வியறிவு கொடுத்து சமுதாயத்தில் ஒரு அங்கிகாரத்தைப் பெற்றுக் கொடுத்து எமது நல்லது கெட்டதைப் புரிந்து கொண்டு அதன்படி நடந்து எல்லாவற்றையும் செய்து முடித்த பின் நாம் எமது சொந்தக் காலில் நிக்கும் போது பெற்றவள் வேண்டாதவள் ஆகிவிடுகின்றாள். இதில் நியாயம் இருக்கின்றதா என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு கணமும் சிந்தித்துப்பாருங்கள். நாம் இன்று உணர்வதுமில்லை மதிப்பதுமில்லை. எம்முடைய தேவை நிறைவேறிவிட்டது அல்லவா. எனக்கு ஒரு பொன் மொழி ஒன்று நினைவுக்கு வருகின்றது "ஏற்றி வைத்தவளை மறந்தால் அவள் தானாகவே இறக்கி வைக்கப்படுவான்" என்பதுதான். ஆனால் நாம் உயரத்தில் இருக்கும் போது சந்தோசப்படும் உள்ளம் அம்மாதான். அதே நேரம் நாம் கீழே விழும்போது ஏந்தி ஆறுதல் தருவதும் அம்மாதான். அம்மா என்பதே எமக்கு நிம்மதி தருவதுதான். ஆனால் பெற்றவளை சிலபேர் வீட்டில் வைத்திரப்பதைக் ்கூட கெளரவககுறைச்கலாக நினைக்கின்றார்கள். அதுதான் இன்றைய காலகட்டத்தில் மனித நாகரீகத்தின் உச்சக்கட்டம் "முதியோர் இல்லம்" என்ற கண்டுபிடிப்பு. ஆம் இது மேலை நாடுகளில் சர்வ சாதாரணமாய் நிலை பெற்றுவிட்டது. ஆனால் கிழைத்தேய நாடுகளில் மிகத்துரிதத்தில் பரவி வருகின்றது. ஏன் நாம் நினைப்பது இல்லை நாமும் ஒரு நாள் வயது முதிர்வோம். அப்போது இப்போது நாம் செய்ததை நம் பிள்ளைகள் எங்களுக்கு செய்வார்கள்தானே. அந்த நேரத்தில் எமது பெற்றவள் எவ்வளவு சங்கடமும் கஷ்ரமும், வேதனையும் பட்டிரப்பார் அதே போல் நாமும் அடைவேம்தானே. இதனால் மனரீதியான பாதிப்பு எவ்வளவு தெரியுமா? " எதை நீ மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றாயோ அதை நீ முதலில் செய்" ஆம் நான் விரும்புவது கூட்டுக்குடும்பமும் அதன் அன்பான சூழலும்தான் அங்கேதான் உறவுகள் பலப்படுகின்றன. சிலையாக இருக்கும் கடவுளை வணங்குகின்றோம். அதுவும் பூசை, புனஷ்காரங்களுடன் அதுவும் தேடிப்போய் வழிபடுகின்றோம். ஆனால் நம் கண்முன்னே இரத்தமும், சதையும், உணர்வுடன் கூடி நம் முன்னே நடமாடும் தாயை வணங்குவதில்லை. சரி வணங்க வேண்டாம். வழிபாடும் செய்ய வேண்டாம். ஆனால் அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கலாம்தானே. வருடத்தில் ஒரு நாள் அன்னையர் தினம் தேவையில்லை. பிள்ளைகளாகிய நாம் வருடம் முழுவதுமே அன்னையர் தினமாக்குவோம். சிலபேர் அன்றைய தினத்தில் தமது தாயாருக்கு ஆடை, அணிகலன், உணவு என்று அன்று மட்டுமே செய்வர்கள். அடுத்த நாள் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான் அவருக்கு இதைவிட அன்பு கனிவு அதனுடன் இவையையும் சேர்த்து கொடுங்கள். நடமாடும் தெய்வமே அம்மாதான்.பிள்ளைகளால் பெற்றவளின் மனமும் வ்ய்று எரிந்தால் அந்த பிள்ளைகள் வாழ்நாளில் என்றுமே முன்னுக்கு வரமுடியாது எல்லோரும் அம்மாவை அன்புடன் உணர்ந்து கொள்வோம். கனிவுடன் பார்த்துக் கொள்வோம். அம்மா இல்லாத குழந்தை இவ்வுலகில் இல்லை. வாழ்க்கையில் ஒரு முறையே கிடைக்கக்கடிய அரிய பொக்கிஷம் அம்மாதான். நாம் வாழும் வாழ்விற்கு ஆதாரமாகவும் அழகு கூட்டுவதுமாக அம்மா இருக்கிறார். வெறும் பாட்டிலும், ஏட்டிலும் சினிமாவிலும் அம்மாவை போற்றுதலை விட்டுவிட்டு நமது நிஜமான மனித வாழ்க்கையில் தாயை உணர்ந்து போற்றுவோம். சினிமாப்பாடலில் கேட்ட ஒருபாடல் திருக்கோவில் கல் வெட்டில் பொறிக்கப்பட்ட ஒரு பாடல் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" தாயை உயர்வாகப் படியாதால்தான் இப்பாடல் புகழ் பெற்றது. ஆம் அம்மாவை நாம் எதிலும் காணலாம் அவரது தாய்மை எதிலும் உணரலம். ஒருமனிதனின் வாழ்க்கையில் அவனது முதல் உறவு , முதல் இடம் அவனது அம்மாதான். அம்மா....அம்மா.....அம்மா.... சுவிஸ் வவா |
|
©www.mykathiravan.com