1994
ஆண்டின் உலக அழகி... இந்த அழகுப்
பெண்ணின் மந்திரப் புன்னகையில் உலகமே
கட்டுண்டு கிடக்கின்றது இன்றும்....
நீ ஒரு நெருப்பு வளையம் --
உன்
நிழலுக்கும் இல்லை சலனம் !
அன்பைப் பொழிவதில் மழைதான் --அதில்
அனைவரும் நனைந்தே மகிழ்வார்!
சிறுவர் பெரியவர் என்றே -- நெஞ்சில்
சிறிதும் பேதம் இல்லை!
பக்குவம் கனிந்த உள்ளம் -- நல்ல
பண்புகள் உலவும் இல்லம்!
கடமை உனது மூச்சு -- அந்தத்
தடமே உனது பேச்சு!
உண்மையாய் உன்னிடம் இருந்தால் --அந்த
உண்மைக்கே நீதான் அடிமை!
குடும்பத் தேரை இழுப்பதில் -- உந்தன்
குணங்கள் தானே தலைமை!
எனக்கெனப் பிறந்த இனிமை -- நான்
உனக்கென வாழும் கவிதை.
பெண்கள் மனதில் இடம் பிடிக்க
வேண்டுமா ?
இயற்கை
நியதி
மேட்டினிலே கொட்டுநீர்
பள்ளம் ஓடும்
மேனோக்கி எறிந்த பொருள்
நிலம்கவரும்
நாட்டிவைத்த கம்பினிலோ
மரத்திலோ போய்
நட்புடனே கொடி வகைகள்
சுற்றிக்கொள்ளும்
சேட்டையாம் இளமையிலே ஆண்பெண்
உள்ளம்
சேர்ந்தொன்றி உடல் அணைய
ஆர்வம் கொள்ளும்
கூட்டுறவால் எப்பொருளும் தன்மை
மாறும்
குணங்களெல்லாம் இயற்கையிலே
அமைந்ததாகும்.
பெண்ணின்
பெருமை
பெண் வயிற்றி லுருவாகிப்
பின்னு மந்த
பெண் கொடுத்த பால் உண்டே
வளர்ந்து; மேலும்
பெண் துணையால் வாழுகின்ற
பெருமை கண்டு
பெண்மைக்கே பெருமதிப்பு
தந்து உள்ளோம்
பெண்ணினத்தை எங்கெவரும்
எவ்விதத்தும்
பெருமைகுன்ற அவமதித்தால்
சகிக்க மாட்டோம்
பெண்மைக்கு நமது கடன்
ஆற்றவாரீர்
பெருந்திரளாய் கூடி ஒரு
முடிவு செய்வோம்.
வளமாக வாழ வழி வகுப்போம்
வாழவேண்டும் என்றெண்ணி
உலக மீது
வந்ததில்லை எனினும் நாம்
பிறந்துவிட்டோம
வாழவேண்டும் உலகில் ஆயுள்
மட்டும்
வாழ்ந்தோர்கள்
அனுபவத்தைத் தொடர்ந்து பற்றி
வாழவென்ற உரிமை எல்லார்க்கும்
உண்டு
வாழ்வோர்க்கும் சாதகமாய்
வாாழும் மட்டும்
வாழ உள்ளோர் அனைவருமே ஒன்று
கூடி வகுத்திடுவோம்
ஒரு திட்டம் வளமாய் வாழ