சிந்திக்க.....,  மறப்பது நன்றே ! மறந்துவிடு !,  சிந்தனை துளி !

சிந்திக்க.....
 

சம்பாதித்த பொருளை வீட்டில்வைத்து அழகு பார்ப்பதை விட
ஏழைகளுக்கு கொடுத்து அவர்கள் கொள்ளும் ஆனந்தத்தை
பார்த்து மகிழ்வடை
 

குறுகிய வாழ்க்கைக்குள் நினைப்பதை
சீக்கிரம் முடித்துவிடு


கொடுமை கொடுமை என்று முடங்குவதை விட
கடுமையாக உழைத்து இன்பமாக வாழ்ந்துவிடு

 

மறப்பது நன்றே !
மறந்துவிடு !

வினாவின் விடையை அல்ல ,
வாழ்வின் வலியை !

தோழனின் தோழமையை அல்ல ,
எதிரியின் துரோகத்தை !

எதிரி என்பவன் வாழ்வில் எதற்கு ?
அவனை மறந்து விடு,
அல்லது அவனது துரோகத்தை
மன்னித்து , மறந்து விடு
இரண்டில் ஒன்றே நன்று !

தோல்வியுற்ற காதலின் நினைப்பெதற்கு ?
அதனை வென்று விடுவோம்,
வாழ்வில் கடந்து வருவோம்;

நீ கண்ட தோல்வியின்
வலியை மறந்து விடு ,
அதனை வெற்றியின்
களிப்பாக்க விரைந்து விடு !

ம‌ண்ணாசையினை மறந்து விடுவோம்,
ஆறடி நிலம் நமக்கு இருக்கு;

நமக்கு தேவை என்ற அனைத்தையும்
ஆசை படுவோம், ஆனால்
பேராசையினை மறந்து விடுவோம் ;

மறப்பதை நினைவில் வைப்போம் !

 

 சிந்தனை துளி !
 
புரிந்துகொள்ளுங்கள் :-
நீங்களாக கேட்காமல் உதவி கிடைக்காது!
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது!
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது!
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது!

நன்றி சொல்லுங்கள் :-
சிந்திக்க தூண்டும் சவால்களுக்கு!
சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு!
கவனகுறையை உணர்த்தும் தோல்விகளுக்கு!
ஓய்வு கொடுக்கும் இரவுக்கு!
நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு!
வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு!

 

 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com